எலி கடித்து குதறியதால் பச்சிளம் குழந்தை பலி -குண்டூர்-ஆந்திரா-இந்தியா-அரசு மருத்துவமனை

எலி கடித்து பச்சிளம் குழந்தை பலி
குண்டூர் : ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவ மனையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை கண் காணிப்பு காரணங்களுக்காக அவசரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளது. அங்கு எலிகள் கடித்துக் குதறியதால், அந்தக்குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்தக் குழந்தையின் தாய், எலி கடித்ததால் என் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். ஆனால் அவர் அதனைக்கண்டு கொள்ளவில்லை. அவர்களின் அலட்சியத்தால்தான் என் குழந்தை உயிரிழந்துள்ளது எனக்கூறி கதறி அழுதார்.

ஸ்ரீ வீரசின்னையா கோவில் - தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க
இந்து கோவில்களும் அவைகள் இருக்கும் ஊர்களும்