கிழங்கு வகைகளின் மருத்துவப் பயன்கள்

கிழங்கு வகைகளின் மருத்துவப்பயன்கள்
முள்ளங்கி: முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதை சமைக்கும்போது ஒருவகை வாடை வரும் எனவே பலர் இதை வெறுத்துவிடுகின்றனர். ஆனால் இதன் மருத்துவ பயன்களை உணர்ந்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது. முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும். பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா, இலங்கை உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது. 100 கிராம் முள்ளங்கிக் கிழங்கில் ஈரப்பதம் 9.4%ம் மாவுச்சத்து, 3%ம் உள்ளது. மீதியில் சிறிதளவு புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், நார்ச்சத்து முதலியவை உள்ளன. வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுடன் இரும்புச்சத்தும் (0.4 மில்லி கிராம்), கல்சியமும் (35 மில்லி கிராம்), பாஸ்பரஸும்(22 மில்லிகிராம்) இருக்கின்றன. இதனால் கிழங்கைப் பச்சையாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.

கேரட்: மஞ்சள் முள்ளங்கி (காரட், கரட், கேரட்) எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.காய்கறிகளில் மிகவும் சுவையானது கேரட். கேரட்டில் வைட்டமின் பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரட் சாப்பிடுவதால் கண்பார்வை கூர்மையாகும். எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம். பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து இதில் உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது

இஞ்சி: உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இஞ்சியானது சமையலில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று.  இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.  இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.     இஞ்சி இலைகளிலும், தண்டுகளிலும் மணம் இருக்கும். இலைப்பகுதி உலர்ந்ததும் வேர்த்தண்டுகள் தோண்டி எடுக்கப்படும்.
கடுமையான கார ருசி உடையது.   இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும், அஜீரணத்தை போக்கும், கபத்தை குணப்படுத்தும், ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது. நன்றாகப் பருத்த இஞ்சியின் தோலைச் சீவி அதை மெல்லிய பில்லைகளாக நறுக்கி, அதில் 24 கிராம் எடை அளவு எடுத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை அதில் விட்டு 5 கிராம் எடையளவு இந்துப்பைத் தூள் செய்து அதில் போட்டு நன்றாக கலக்கி மூன்றுநாட்கள் மூடி வைத்திருந்து பிறகு தினசரி இஞ்சித் துண்டுகளை மட்டும் வெளியே எடுத்து ஒரு சுத்தமான தட்டில் பரப்பி தூசு எதுவும் விழாதபடி மெல்லிய துணியால் மூடி வெய்யிலில் நன்கு காய வைக்க வேண்டும். மாலையில் காய்ந்த துண்டுகளை மீண்டும் மீதமுள்ள இந்துப்பு கலந்த எலுமிச்சைச் சாற்றில் போட்டு காலை வரை ஊற வைத்து மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்விதமாக இஞ்சி எலுமிச்ச சாற்றை முழுவதுமாக உறிஞ்சிய பின் நன்கு சுக்கு போல காய விட்டு எடுத்து ஒரு கண்ணாடி சீசாவில் போட்டு வைத்து கொள்ளவேண்டும். இதுவே இஞ்சிச் சொரசம் எனப்படும். வாயு தொந்தரவு, அஜீரணம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு ஏற்படும் சமயம் 2½ கிராம் எடை முதல் 5 கிராம் எடை வரை (ஒரு சிறு துண்டு) காலை மாலை சாப்பிட்டு வர மேற்கண்ட கோளாறுகள் பூரணமாக குணமாகும். காலையில் இஞ்சி சாறுடன் தேன் கலந்தும்,மதிய உணவுக்குப் பின் சுக்கு, கருப்பட்டி கலந்த சுக்கு கசாயமும்,மாலையில் (இரவு உணவுக்கு பின்) கடுக்காய் சூரணம் என 48 நாட்கள் (மண்டலம்) சாப்பட்டு வந்தால் உடல் சோர்வு இன்றி சுறுசுறுப்பாக இருக்கலாம். இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்கள் உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.  உலர்ந்த இஞ்சியே 'சுக்கு' (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை "சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும்.

உருளைக்கிழங்கு: உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் (Solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும். உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும். இன்றைய பெரு நாட்டுப் பகுதியே உருளைக் கிழங்கின் தாயகம் எனப்படுகிறது. அங்கிருந்து 1536 இல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. ஆண்டீய மலைப் பகுதிகளில் 1000 உக்கும் மேலான வெவ்வேறு வகை உருளைக்கிழங்குகள் விளைகின்றன. ஒரே பள்ளத்தாக்கிலும் கூட 100 வகையான உருளைக்கிழங்குகள் விளைகின்றன.. முதலில் பெரு நாட்டில் தொடங்கி இருந்தாலும் இன்று பயிராகும் உருளைக்கிழங்கில் 99% சிலி நாட்டின் தெற்கு-நடுப் பகுதிகளில் இருந்து வந்த வகையே ஆகும். ஐரோப்பாவில் அறிமுகப் படுத்தப்பட்டபின் உருளைக்கிழங்கு அடிப்படை உணவு வகைகளில் ஒன்றாக மாரியது. ஆனால் உருளைக்கிழங்கில் பல வகைகள் இல்லாமல் ஒரே வகை பயிரிடப்பட்டதால் நோயால் தாக்குண்டது. 1845 இல் பூஞ்சைக் காளான் போன்ற, மெல்லிழைகள் நிறைந்த, ஒற்றை உயிரணு உயிரினமாகிய ஃவைட்டோஃவ்த்தோரா இன்ஃவெசுடான்சு (Phytophthora infestans) என்னும் ஒன்றால் ஏற்படும் ஒரு கொள்ளை நோயால் பெரிய அளவில் உருளைக்கிழங்கு பயிர்கள் தாக்குற்றுப் பரவி, மேற்கு அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட நேர்ந்தது. சோவியத் ஒன்றியம் பிரிந்தபின்னர் உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும். உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணப்படுத்துகிறது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.

கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். இதை சமைக்கும் போது இதனுடன் சிறிது புளியை சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.


வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள்வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.
வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும்.
தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.
வாட்டர் தெரபியின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினு மினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால்,
அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,
2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,
7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,
4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,
3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,
10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,
மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகபிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்று போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.
இயற்கையோடு இணைந்து வாழ்வோம் – இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்….
30 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது. மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.

மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் வேரறுக்க வல்லது. அவை பின்வருமாறு:-
1.புற்று நோய்க்கு எதிரானது.
2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.
3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.
4. குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.
5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.
6.உற்சாகத்தைத் தரவல்லது. (ரத்தத்தில் பிராணவாயுவை அதிகப்படுத்த வல்லது).
7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.
8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.
9.வற்றச் செய்வது.
10.அகட்டு வாய் அகற்றி.
11.கருத்தடைக்கு உகந்தது.
12.குளிர்ச்சி தரவல்லது.
13.மேற்பூச்சு மருந்தாவது.
14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.
15.கபத்தை அறுத்து வெளித்தள்ளக் கூடியது.
16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.
17.மலத்தை இளக்கக் கூடியது.
18.கண்களுக்கு மருந்தாவது.
19.உடலுக்கு உரமாவது.
20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.
21. காயங்களை ஆற்ற வல்லது.
இப்படி நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள நோய்களை வேரறுக்க வல்லதாக அருகம்புல் திகழ்கிறது.
அருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்துப் பொருள்கள் :
அருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்தும் பொருள்களும் ஒரு நீண்ட பட்டிலை உடையது. அருகம்புல்லில் பின்வரும் மருத்துவ வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவையாவன:
1.மாவுச்சத்து (புரோட்டீன்).
2.உப்புச்சத்து (சோடியம்)
3.நீர்த்த கரிச்சத்து
4.அசிட்டிக் அமிலம்
5.கொழுப்புச் சத்து
6.ஆல்கலாய்ட்ஸ்
7.அருண்டோயின்
8.பி.சிட்டோஸ்டர்
9.கார்போஹைட்ரேட்
10.கவுமாரிக் அமிலச் சத்து
11.ஃபெரூலிக் அமிலச் சத்து
12.நார்ச் சத்து (ஃபைபர்)
13.ஃப்ளேவோன்ஸ்
14.லிக்னின்
15.மெக்னீசியம்
16.பொட்டாசியம்
17.பால்மிட்டிக் அமிலம்
18.செலினியம்
19.டைட்டர் பினாய்ட்ஸ்
20.வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியன பொதிந்துள்ளன.


கீரை வகைகளும் அதன் மருத்துவ பயன்களும்

குப்பைமேனிக்கீரை

குப்பை மேட்டிலும், வழியோரங்களிலும், தோட்டங்களிலும் மானாவாரியாக வளர்ந்திருப்பதை காணலாம். பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுவதில்லை. கலவைக்கீரையில் சிறிதளவு இக்கீரையை சேர்ப்பார்கள்.

சரும வியாதிகள் நீங்க :

பலருக்கு தோலில் சொறி, சிரங்கு, புண் போன்றவைகளால் வடுவடுவாய் கறுத்து தேகம் அழகற்று காணப்படும். இப்படிப்பட்டவர்கள் விலையுயர்ந்த லோஷன்களை தடவியும் தோல் பழைய நிலைக்கு வருவதில்லை.

குப்பைமேனிக் கீரையை தேவையான அளவு எடுத்து அதனோடு மஞ்சள், உப்பு சேர்த்து மைபோல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வரவேண்டும். ஒரு மாதத்திற்கு விடாமல் இப்படி செய்து வந்தால், தோல் நோய்கள் பாதிக்கப்பட்ட தோல் சுத்தமாகி அழகு பெற்றதாக மாறிவிடும்.

மலக்கட்டு நீங்க :

பலர் டாய்லெட்டில் (கழிப்பறையில்) மலம் கழிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இவர்கள் குப்பைமேனி இலையை கொதிக்கும் குடிநீரில் போட்டு போட்டு ஆறியபின் அந்த நீரில் ஒரு டம்ளர் எடுத்து சிறிதளவு உப்பு கலந்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால் மலம் இளகி கழியும். சிரமப்பட வேண்டாம். இரவு சாப்பிட்ட பின் இந்த நீரைப் பருகவும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :

குடற்புழுக்களை அழிக்கும். கட்டிகள், வீக்கங்கள் சரியாகும்; தீப்பட்ட புண்ணுக்கு இவ்விலைச்சாறு நல்ல மருந்து; வயிற்றுவலியைப் போக்கும்.

முருங்கைக் கீரை :

இம்மரத்தின் வேர், பட்டை, காய்கள், பூக்கள், கீரையாவும் மனித உடலுக்கு தேவையானவைகளாகத் திகழ்கின்றன. அருமையான சுவையை கொண்டது. இக்கீரை வாரத்திற்கு இரண்டு நாட்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நல்ல வலுவையும் ஆயுட்காலம் வரை பெறலாம்.

உடல்பலம் பெற :

தினமும் முருங்கைக் கீரையை வாங்கி, அதனை சுத்தம் செய்து இதனுடன் வேர்க்கடலையை பொடித்துப் போட்டு, நெய்யை தேவையான அளவு ஊற்றி, சமைத்து சாப்பிட்டு வாருங்கள் போதும். ஒரு மாதத்தில் உங்கள் உடலின் மாற்றத்தைக் காணலாம். இச்சமையலின் போது நாட்டுக் கோழி முட்டையையும் சேர்க்கலாம்.

உடல் அசதி தீர வேண்டுமா?

கீரையை உருவி விட்டபின் நாம் தேவையற்றது என உதறும் இளம் காம்புகளை நறுக்கி, மிளகுரசம் வைத்து தினம் மதியம் ஒரு அவுன்ஸ் (அரை டம்ளர்) பருகி வந்தாலும் சரி, சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் சரி, நாளடைவில் கை கால் உடல் அசதி யாவும் நீங்கி, தேகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும்.

தாது கெட்டியாக :

முருங்கைக் கீரையோடு வேக வைத்த வேர்க்கடலையையும் கலந்து சமைத்து சாப்பிட்டு வர, விலையுயர்ந்த பருப்புகளில் உள்ள சத்துக்களை விட பல மடங்கு சத்துக்களைப் பெறலாம்.

முருங்கைக்காய்க்கு நமது உடலை என்றும் இளமையாக வைத்திருக்கும் சக்தி உண்டு. அதனால் அடிக்கடி காயையும் சாப்பிட்டு வாருங்கள்.

மலத்திலுள்ள பூச்சிகள் வெளியேற

முருங்கைக்கீரைச் சாறு பூச்சிகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. சிறுவர்களுக்கு அடிக்கடி மலக்குடலில் பூச்சி உண்டாகும்.

முருங்கைக்கீரையை நன்கு நசித்து சாறெடுத்து அதனோடு தேன் கலந்து, இரவில் படுப்பதற்கு முன் இரு டீஸ்பூன் கொடுத்து வந்தால் மலப்பூச்சிகள் சில நாட்களில் வெளியேறிவிடும்.

இதயம் வலிமைபெற :

முருங்கைப் பூக்களை சேகரித்து சுத்தப்படுத்தி, அதை எண்ணெய் கலந்து பொறிக்காமல் வறுக்காமல் அவித்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெறும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :

பித்தமயக்கம் வராது; இருமல், குரல் கம்மல் நீங்கும்; இடுப்புவலி தீரும்; ஆஸ்துமா கட்டுப்படும்; கண்நோய்கள் நீங்கும்; சொறி, சிரங்கு நீங்கும்; காதுவலி நீங்கும்; கொழுப்பைக் கரைக்கும்; இரத்தக் கொதிப்பை அடக்கும்; காமாலையை கட்டுப்படுத்தும்; நீர்க்கட்டு உடையும்; பற்கள் உறுதிப்படும்.

வல்லாரைக்கீரை

ஞாபக சக்தியை கொடுக்க இதற்கு இணையாக ஒரு கீரை உலகளவிலேயே கிடையாது என்று கூறலாம். வல்லாரை ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளர்ந்து காணப்படும். வல்லாரையை சமையலுக்கு பயன்படுத்தும்போது புளியை சேர்க்க வேண்டாம். புளி வல்லாரையின் சக்தியைக் கெடுத்துவிடும். உப்பையும் பாதியாய் போட்டுதான் சமைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு

வல்லாரையை நெய்யால் வதக்கி சிறிதளவு இஞ்சி, இரண்டு பூண்டு கீற்றுகள், சேர்த்து துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வியாதிகள், நரம்புக்கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியவைகள் எல்லாம் குணமாகும்.

பற்கள் பளீரென வெண்மையாக :

பற்களில் பலருக்கு வண்ணம் படிந்து சிரித்தால் பார்ப்பவர் முகஞ் சுளிப்பார்கள். மஞ்சளைப் போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரைக் கீரையைப் பற்களின் மீது வைத்துத் தேய்ப்பதினால் மஞ்சள் போவதோடு, பற்கள் வெண்மையாக பளிச்சிடும்.

அளவோடு உண்ணுதல் :

வல்லாரையை அளவோடு குறைந்த அளவுதான் சாப்பிட வேண்டும். உடம்பை பிழிவதைப் போல் வழி ஏற்படும். எனவே, இக்கீரையை அடிக்கடி உண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவதே நல்லது.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :

ஆயுளைப் பெருக்கும்; குறிப்பாக இரத்தத்தை சுத்தப்படுத்தும்; மூளை பலப்படும்; மாலைக்கண் நோய் நிவர்த்தியாகும்; கை, கால் வலிப்புநோய்களை கட்டுப்படுத்தும்; வயிற்றுக் கடுப்பு நீங்கும்; காய்ச்சலைப் போக்கும்; முகத்திற்கு அழகைத் தரும்; மாரடைப்பு வருவதை தடுக்கும்; பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.

புளிச்சக்கீரை

உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடிய இக்கீரையை அடிக்கடி பயன்படுத்தலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகளவில் அடங்கியுள்ளன. இதன் பூக்களையும் சேகரித்து சமைத்து உண்கிறார்கள்.

மலச்சிக்கல் நீங்க :

மலச்சிக்கலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். இக்கீரையை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

தாது விருத்திக்கு:

எதுவாக இருப்பினும் புளிச்ச கீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். இந்திரியத்தை கெட்டிப்படுத்தும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :

சொறி, சிரங்குகளை போக்குகிறது; குடற் புண்ணை ஆற்றும்; உடலிலுள்ள புண்களை ஆற்றுகிறது; பசி மந்தத்தை போக்குகிறது; வயிற்று வலியை போக்கும்; இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; ஜீரணக் கோளாறுகளை சரிபடுத்தும்; இதய நோய் வராமல் பாதுகாக்கும்; சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்தும்.

வெந்தயக்கீரை

இக்கீரை பெரும் மருத்துவப் பயன்கள் கொண்டது. பல நோய்களைத் தீர்க்கும். இக்கீரையின் மாறுபட்ட சுவை கசப்புத் தன்மையால் அதிகம் பேர் இதை பயன்படுத்துவதில்லை.

மாதவிடாய் கோளாறா:

இக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகளை அற்புதமாய் நீக்கிவிடும்.

இடுப்பு வலியா :

இக்கீரையோடு தேங்காய் பால், நாட்டுக்கோழி முட்டை (நீரிழிவு உள்ளவர்கள் மஞ்சள் கருவை நீக்கவும்) கசகசா, சீரகம், மிளகுத்தூள், பூண்டு இவைகளோடு நெய்யையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்து போகும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்:

கபம், சளியை அகற்றுகிறது; மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது; உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது; கண் பார்வையைத் தெளிவாக்குகிறது; நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது; வயிற்றுக்கோளாறுகளை வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மார்பு வலியிலிருந்து காக்கிறது; தலைசுற்றலை நிறுத்துகிறது; உடல் சூட்டை தணிக்கிறது.

ரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்
இந்திய சமையலில் தனியா எனப்படும் கொத்தமல்லிக்கு சிறப்பு மிக்க இடமுண்டு. சமையலில் மசாலா பொருளாக வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் இருந்து வளரும் சிறுதாவரமான கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இந்த சிறிய வகை தாவரத்தில் உள்ளது …என்றால் மிகையில்லை. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உரைவதை தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.

கண்பார்வை தெளிவடையும்

சிறுவயது முதலே கொத்தமல்லி கீரையைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலைக்கண்நோய் ஏற்பட்டவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர மாலைக்கண்நோய் குணமடையும்.

மக்கட் பேறு ஏற்படும்

உடலில் புதிய ரத்தம் உண்டாகி நல்ல பலம் பெற வேண்டுமானால் கொத்தமல்லிக்கீரையை நெய்யில் வதக்கி துவையல் போல சாப்பிட்டு வரவேண்டும். இதன் மூலம் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துக்களை விட அதிக சத்துக்கள் கிடைக்கும். தினசரி மல்லிக்கீரையைச் சாப்பிட்டு வர எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் பலசாலியாக வாழலாம்.

கொத்தமல்லிக்கீரையை தினசரி சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உற்பத்தியாகும். இதனால் தாது விருத்தி அடையும். மக்கட் பேறுக்கு வழிகிடைக்கும்.கர்ப்பிணிகள் கர்ப்பம் தரிக்கத் தொடங்கிய மாதத்தில் இருந்து கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து வர வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தையில் எலும்புகளும், பற்களும் உறுதியடையும். சொறி, சிரங்கு உள்ளிட்ட நோய்கள் தாக்காது.

வயிற்றுப்புண் குணமடையும்

வயிற்றில் புண் இருந்து அதன் மூலம் அடிக்கடி வலி ஏற்படுபவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் இதனால் புண் ஆறி வயிற்று வலி குணமடையும்.வாய், உதடு போன்றவற்றில் சிறு புண் ஏற்பட்டிருந்தாலும் கொத்தமல்லியை துவையல் செய்து உட்கொண்டு வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்

மூக்கு தொடர்புடைய நோய்கள்

பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற நோயினால் சிரமப்படுபவர்கள் கொத்தமல்லித் துவையலை உணவில் சேர்த்து உட்கொள்ளவேண்டும். இதனால் மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

தோல் நோய்கள் குணமாக்குவதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. சொறி, சிரங்கு, புண் போன்றவைகளுக்கு மருந்து போட்டுக்கொண்டு வந்தாலும் தினசரி கொத்து மல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர அவை சீக்கிரம் குணமடையும்.

ராஜயோகம்-சாண்டில்யன்,நூல் பெயர்- ராஜயோகம்,எழுத்தாளர்- சாண்டில்யன்,நன்றி- மூல மின்நூல் பதிவாளருக்கு,DOWNLOAD
கீழ் இருக்கும் லிங்கை ஓப்பன் செய்து பார்க்கவும்
http://tamilnesan1981.blogspot.in/2015/08/blog-post_79.html

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்-ரங்கவாசன், நூல் பெயர் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்,எழுத்தாளர்- ரங்கவாசன்
மலை அரசி-சாண்டில்யன்,
பூங்காற்று-ரமணிசந்திரன்,
மூன்று விநாடி முகம்-ராஜேஷ் குமார்
இது காதலென்றால்-இன்பா அலோசியஸ்
வசந்தங்களே வாழ்த்துங்களே-சத்யா ராஜ்குமார்
உயிரே உனக்காக-இன்பா அலோசியஸ்
கீதா மகாமித்யம்(கீதையின் பெருமை)
அந்தமான் அபாயம்-ராஜேஷ் குமார்
உயிரோடுதான் விளையாடுவேன்-ராஜேஷ் குமார்
உன்னை விரும்பினேன் உயிரே-விஜி பிரபு
எல்லாம் உன்னாலே-இன்பா அலோசியஸ்
தீர்த்தக் கரையினிலே-வித்யா சுப்ரமணியம்
பனிப் பாறைகள்-சிவபாரதி
நான் தேடிய நிலவே-சத்யா ராஜ்குமார்
நீல நிற நிழல்கள்-ராஜேஷ் குமார்
உனக்காகவே வாழ்கிறேன்-அருணா நந்தினி
அருந்ததி-அமுதா கணேசன்
இணையுமோ இருதயம்-ஸ்ரீகலா
வா நாளை நாமாக -ஸ்ரீகலா
துணையாக வருவாயா தோழனே-விஜி பிரபு
கல்யாணக் கனவுகள்-கீதா பாலன்
ஒரு மழைக்காலத்து மாலை நேரம்-எண்டமூரி வீரேந்திரநாத்...
மாவிலைத் தோரணங்கள்-எஸ்.லதா சரவணன்
மரபுகள் முறிகின்ற நேரங்கள்-ஜோதிர்லதா கிரிஜா
விடியலைத்தேடி-ரமணிசந்திரன்
சூரியகாந்தம்-லஷ்மி
காகிதப்பூத்தேன்-ராஜேஷ் குமார்
மாற்றம்-ஜோதிர்லதா கிரிஜா
சிகாகோவில் தமிழ்வாணன் (ஓவியங்களுடன்)-தமிழ்வாணன்
மாற்றங்கள்-எம்.எம்.மேனோன் -தமிழில் சிவன்
க்றீச்..க்றீச்..க்றீச்-ஸ்ரீ வேணுகோபாலன்- (புஷ்பா த...
சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்-டாக்டர்.எஸ்.எம்.க...
மாயக்கனவுகள்-கோட்டயம் புஷ்பநாத்-தமிழில் சிவன்
தம்புரான் குன்று-ஏற்றுமானூர் சிவகுமார் -தமிழில் சி...
பதிலுக்கு பதில்-கோட்டயம் புஷ்பநாத்-தமிழில் சிவன்
செண்பகத் தோட்டம்-சாண்டில்யன்
பூங்காற்று புதிதானது-சித்ரா பாலா
மீண்டும் தூண்டில் கதைகள்-சுஜாதா
ஆயிரம் நிலவே வா-எஸ்.லதா சரவணன்
தித்திக்கும் தீ-காஞ்சனா ஜெயதிலகர்
மணிரத்னத்தின் சினிமா - யமுனா ராஜேந்திரன்
விலாசினி
மலர்ச்சோலை மங்கை-டாக்டர். எல்.கைலாசம்
பிராங்க்பர்ட்டில் தமிழ்வாணன் (ஓவியங்களுடன்)-தமிழ்வ...
குருதித்தேசம்-பா.மோகன்
ஒரே ஒரு துரோகம் - சுஜாதா
இருபது கோடி நிலவுகள்-எஸ்.லதா சரவணன்
ஜாம்பவதி-எஸ். குலசேகரன்-சரித்திர நாவல்
புரட்சிப் பெண்-சாண்டில்யன்
வீரபாண்டியன் மனைவி-அரு.ராமநாதன்
போதையில் கரைந்தவர்கள்-நீல பத்மநாபன்
ஒரு பறவையின் சரணாலயம் - கமலா சடகோபன்
குமாரதேவன்- பாகை நாடன்
நான் உங்கள் எதிரி-சுபா
ஆஸ்டின் இல்லம் - சுஜாதா
இரண்டாவது ஆப்பிள் - எஸ்.எல்.வி.மூர்த்தி
மௌனத்தின் சப்தங்கள்-வைரமுத்து
பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை-அகதா கிறிஸ்டி (தமிழில...
ஜினீவாவில் சங்கர்லால் (ஓவியங்களுடன்) - தமிழ்வாணன்
கருப்பு வானவில்-ராஜேஷ் குமார்
உலக அதிசயங்கள்-எஸ்.சுஜாதா
அம்பானிகள் பிரிந்த கதை-என்.சொக்கன்
நான் எம்.பி.ஏ ஆவேன்-எஸ்.எல்.வி. மூர்த்தி
சாணக்கியர்-ச.ந.கண்ணன்
கண்ணீரில்லாமல்-சுஜாதா
வாழ்க்கை ஒரு வானவில்- ஜோதிர்லதா கிரிஜா
மருமகளின் மர்மம்-ஜோதிர்லதா கிரிஜா
அழகான ராட்சசியே (மூன்று பாகங்கள்) - முத்துலட்சுமி ...
ராஜநந்தி-முகிலன்-சரித்திர நாவல்
நேப்பிள்ஸில் சங்கர்லால் (ஓவியங்களுடன்) - தமிழ்வாணன..
நியூயார்க்கில் சங்கர்லால் (ஓவியங்களுடன்) - தமிழ்வா...
திரும்பி வா வசந்தமே-சுபா
தீர்ப்பு-ராஜேஷ் குமார்
மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே-ராஜேஷ் குமார்
தனித்திரு விழித்திரு-ராஜேஷ் குமார்
கருப்பு ஞாயிறு சிவப்பு திங்கள்- ராஜேஷ் குமார்
என் வானம் மிக அருகில்-ராஜேஷ் குமார்
அந்த 69 நாட்கள்-ராஜேஷ் குமார்
2000 சதுர அடி சொர்க்கம்-ராஜேஷ்கு...
ஆகிய புத்தகங்கள் டவுண்லோடு செய்திட கீழ்கண்ட லிங்கிற்கு செல்லலாம்

http://tamilnesan1981.blogspot.in/2015/08/blog-post_75.html